நேற்று வரை
அடிமை விலங்காய்
முடங்கிக் கிடந்தோம் .
காசுக்கும் மதுவுக்கும்
கட்டில்களாய் மெத்தைகளாய்...
இன்று
கிழக்கும் மேற்கும்சந்தித்துக்கொண்டன .
தனித்தனிக் கூண்டில்
அடைத்து வைக்கப் பட்டிருந்த
சிங்கங்களும் புலிகளும் ஒன்றையொன்று
கட்டித் தழுவிக் கொண்டன.
இனி
எந்தச் சாட்டை அடிக்கும் மண்டிஇடாது .
எந்த அறுசுவைக்கும் நாக்கை நீட்டாது .
நீண்டநாட்களாய் இவர்களின்
மனக்காட்டில் புகைந்துகொண்டிருந்த கோபம்
இன்று நெருப்பானது.
இன்று நெருப்பானது.
எரியப் போவது
மண் குடிசைகள் அல்ல ...
இப்போர்வீரர்கள்
அலங்கார வார்த்தைகளையும்
அலங்கார பொம்மைகளையும்
கேட்கப் போவதுமில்லை.
பார்க்கப் போவதுமில்லை.
ஏனென்றால்
கேட்டுப் பார்த்து விட்டார்கள்
பார்த்துக் கேட்டுவிட்டார்கள்.
எந்த பயனும்
உழைப்பவனை உயர்த்துவதாக இல்லை.
இந்த ஏற்றத்தாழ்வுகளைப்
பகிர்ந்து அளிக்கவே உழைக்கும் வர்க்கம்
பகிர்ந்து அளிக்கவே உழைக்கும் வர்க்கம்
புறப்பட்டுவிட்டது...
இவர்கள்
புரிய வைப்பார்கள்.
பூமியை நனைய வைப்பார்கள்.
காக்கிச் சட்டைக்கும்
கருப்புச் சட்டைக்கும்
இனி வேலை இல்லை
என்று சொல்ல வைப்பார்கள் .
0



