Monday, 4 June 2012

இந்திய தேசம்



சாதித் தீக்குள் இரையாகும்
சாதாரண மக்கள்

மதத்தின் பெயரில்
மனிதக் கொலைகள் !

தேசமெல்லாம் பொங்கி வழியும்
 ஊழலின் ஊற்றுக் கண்கள் !

விண்ணை முட்டும்
விலைவாசி ஏற்றம் !

வயிற்றில் ஓடுகின்றன
வறுமையின் கோடுகள் !

அரசியல் போர்வையில்
தாராளமாய்  டாஸ்மாக் கடைகள் !

வேலை வாய்ப்பு அலுவலகத்தில்
அனுமார் வாலாய்க்
காத்திருப்போர் பட்டியல் !

திரும்பும் திசையெல்லாம்
கொலைக்கொள்ளைகள் !

கொள்ளையர்களின் கையில்
இந்திய தேசம் !

இளைஞர்களின் மனசில்
இன்னொரு சுதந்திரம் !


0

நீ வாழ்க

உப்புக்கும் மிளகாயிக்கும்
உதவாத உன் கவிதை
எனக்கு  எதற்கு ?
என்று என் மனைவி கேட்டாள் .
சட்டென்றுச் சொன்னேன்.
 பாரதி , பாரதிதாசன் ,
கண்ணதாசன்,  வைரமுத்து
துணைவியார்கள் இப்படிக் கேட்டிருந்தால்
விடுதலைக்கு    வித்தாகிய
தீப்பொறி கிடைத்திருக்குமா? 
என்றும் தெவிட்டாதா திரை இசைப்பாடல்கள்
பிறந்திருக்குமா? என்று கேட்டேன் .

எழுதுங்கள் என்றாள் .
நீ வாழ்க என்றேன் !
என் கவிதைத் தேர் நகர்ந்தது...


0  
Facebook Google Digg Pinterest