Monday, 4 June 2012

நீ வாழ்க

உப்புக்கும் மிளகாயிக்கும்
உதவாத உன் கவிதை
எனக்கு  எதற்கு ?
என்று என் மனைவி கேட்டாள் .
சட்டென்றுச் சொன்னேன்.
 பாரதி , பாரதிதாசன் ,
கண்ணதாசன்,  வைரமுத்து
துணைவியார்கள் இப்படிக் கேட்டிருந்தால்
விடுதலைக்கு    வித்தாகிய
தீப்பொறி கிடைத்திருக்குமா? 
என்றும் தெவிட்டாதா திரை இசைப்பாடல்கள்
பிறந்திருக்குமா? என்று கேட்டேன் .

எழுதுங்கள் என்றாள் .
நீ வாழ்க என்றேன் !
என் கவிதைத் தேர் நகர்ந்தது...


0  

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest