Saturday, 5 November 2011

சங்கமம்

அன்பானவளே !
உன்னை வரவேற்கிறேன் ...
என் இரண்டாம் கவிதைத்தொகுப்பின்
அடையாளச் சின்னமே
உன்னை ஆராதிக்கிறேன் !
தூண்டிலில் மாட்டிக்கொண்ட
மீனைப் போல் நீ என் இதையத்தில்
எப்படிச் சிக்கிக் கொண்டாய் ?

இப்போது எல்லாம் உன் நினைவலைகள்
அடிக்கடி வந்து என் தூக்கத்தை 
அமர்க்களம் செய்வதால் 
எத்தனையோ இரவுகள் 
பகலாகவே விடிகிறது !

உன்னுடன் சின்னச் சின்ன சந்திப்புகளும் 
உன் மின்னல் பார்வையும் ...
அவ்வப்போது பூமியில் வந்து போகும் 
நில நடுக்கத்தைப் போல்  என்னை
அசைத்து விட்டுச் செல்கிறது !

அன்பே !
ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்
நீ உன் தோழியோடு வந்தபோது
உன் உதட்டிலிருந்து சப்தம் இல்லாமல்
ஒரு வெள்ளை ரோஜா காற்றில் பறந்தது!

எதிரில் வந்த நான் திரும்பிப் பார்த்தேன்
என் கண்களுக்கு எட்டிய தூரம்
எந்த மனிதரும் இல்லை!

தாமதமாகத் தெரிந்துகொண்டேன்
அந்தப் 'பூ' என்னக்காக உதிர்ந்ததென்று!

நினைத்துப் பார்க்கிறேன்
இது நட்பின் அடையாளமா ?
இல்லை
இரண்டு இதயங்களின் சங்கமிப்பா ?

o

1 comment:

  1. மழலை உலகம் மகத்தானது!

    இந்த பதிவு தொடர் பதிவு என்பதால் இதனை தொடர்ந்து எழுதுமாறு கேட்டுக் கொண்ட (சகோதரர் விசு)ரசிகன் அவர்களுக்கு என் முதல் நன்றியும், வணக்கங்களும்.
    இப்பதிவை மேலும் தொடர இருக்கின்ற அன்புச்சகோதரர்கள்
    1.murugan
    2.முனைவர்.இரா.குணசீலன்
    3.vinayagamurthy
    4கவிதை வீதி... // சௌந்தர் //
    ஆகியோர்களுக்கும் என் நன்றியும்,வாழ்த்துக்களும்!

    ReplyDelete

Facebook Google Digg Pinterest