அம்மா கர்ப்பத்தில் சுமந்தவள் .
அப்பா கற்பூரமாய் எரிந்தவர்.
இருக்க இடம் உண்ண உணவு உடுக்க உடை
இம்மூன்றுக்கும் ஆதாரம் அப்பா !
கனவுகளையும் கற்பனைகளையும்
நிஜமாக்கித் தந்தவர் .
குடும்பம் என்ற சொல்லுக்கே
இலக்கணமாய்த் திகழ்ந்தவர் .
மனைவியையும் மக்களையும்
இரு கண்களாகப் போற்றியவர் .
குடும்ப பாரம் சுமந்தே
அப்பாவின் தலை வழுக்கை ஆனது !
பிள்ளைகள் பிற்காலத்தில் உதவும் என்று
மாடாய் உழைத்து ஓடாய்ப் போனவர் .
சம்பாதிக்கும் வரையில் மரியாதை
இல்லாதபோது அவருக்கோ அவமரியாதை.
நேற்றைய நிகழ்ச்சிக்கெல்லாம் இவரே முதல்வர் .
இன்றோ முடங்கியதால் ஓரம் கட்டிய முடவர் .
பிள்ளைகள் தாங்கும் என்று
ஓடி வந்த போது...
ஊன்று கோலே தாங்கியது .
எத்தனை பிள்ளைகள் இருந்தாலும்
முதியோர் இல்லத்தில்தான் அப்பா !
அம்மாவும் அப்பாவும் பிள்ளைகளைப்
பன்னீரால் நனைத்தனர் .
பிள்ளைகளோ இருவரையும்
கண்ணீரில் கரைத்தனர் !
o




No comments:
Post a Comment