Tuesday, 1 November 2011

கனவுகளும் கற்பனைகளும்



அம்மா கர்ப்பத்தில் சுமந்தவள் .
அப்பா கற்பூரமாய் எரிந்தவர்.

இருக்க இடம் உண்ண உணவு  உடுக்க உடை 
இம்மூன்றுக்கும் ஆதாரம் அப்பா !

கனவுகளையும் கற்பனைகளையும்
நிஜமாக்கித் தந்தவர் .
குடும்பம் என்ற சொல்லுக்கே 
இலக்கணமாய்த் திகழ்ந்தவர் .

மனைவியையும்  மக்களையும் 
இரு கண்களாகப் போற்றியவர் .
குடும்ப பாரம் சுமந்தே 
அப்பாவின் தலை வழுக்கை ஆனது !

பிள்ளைகள் பிற்காலத்தில் உதவும் என்று 
மாடாய் உழைத்து ஓடாய்ப் போனவர் .

சம்பாதிக்கும் வரையில் மரியாதை 
இல்லாதபோது அவருக்கோ அவமரியாதை.

நேற்றைய நிகழ்ச்சிக்கெல்லாம் இவரே முதல்வர் .
இன்றோ முடங்கியதால் ஓரம் கட்டிய முடவர் .

பிள்ளைகள் தாங்கும் என்று 
ஓடி வந்த போது...
ஊன்று கோலே தாங்கியது .

எத்தனை பிள்ளைகள் இருந்தாலும் 
முதியோர் இல்லத்தில்தான் அப்பா !

அம்மாவும் அப்பாவும் பிள்ளைகளைப் 
பன்னீரால் நனைத்தனர் .
பிள்ளைகளோ இருவரையும் 
கண்ணீரில் கரைத்தனர் !

o                           

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest