Wednesday, 31 October 2012

தங்கர்பச்சானுடன்





          கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி திரைப்படஇயக்குனர் தங்கர்பச்சானுடன் .


நூல்வெளியீட்டு விழா







             
            விழுப்புரத்தில் 12.05.2012. அன்று பேராசிரியர் த.பழமலய் அவர்கள்  தொகுத்த "முனேற்றவந்த  மூன்று தலைமுறைகள்"நூல்வெளியீட்டு விழாவில் புதுவை சட்டப்பேரவைத் தலைவர் வ.சபாபதி ,அச்சமில்லை ஆசிரியர் ந. இறைவன்  மற்றும் சான்றோர்பெருமக்கள் கலந்து கொண்டனர். 

            அறிஞர் வே.ஆனைமுத்து அவர்களிடம் கவிஞர்ஜா.வினாயகமூர்த்தி நூலைப்  பெற்றுக்கொண்டார். நூலை தொகுப்பித்தவர் நல்லாசிரியர்  தெ.வே.சஞ்சீவிராயன் அவர்கள் ஏற்புரையோடு விழா சிறப்பாக நடைபெற்றது.






Sunday, 7 October 2012

விழுப்புரம் கம்பன் விழாவில்

விழுப்புரம் கம்பன் விழாவில் 





                 5.8.1990.அன்று  விழுப்புரம் கம்பன் விழாவில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் கவியரங்கத்தில் கலந்துகொண்டபோது கவிஞர் ஜா.வினாயகமூர்த்தி எழுதிய  தனது முதல் கவிதைத் தொகுப்பான "மனசுக்குள் மகரந்தம் " என்ற  கவிதைத் தொகுப்பினை அளித்து மகிழ்விக்கிறார் .







Wednesday, 3 October 2012

பாராட்டுவிழா




பாராட்டுவிழா 


                     தமிழக முதல்வர் மாண்புமிகு ஜெ .ஜெயலலிதா அவர்கள்
  டாக்டர்  G .விஸ்வநாதன் Ph.D.,அவர்களை தமிழ்நாடுஆசிரியர்
கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை  வேந்தராக நியமனம் செய்ததற்கு விழுப்புரத்தில்02.09..2012.அன்றுஆசிரிய பெருமக்களும் ,மாணவர்களும் 
 முதல்வருக்கு  நன்றி  தெரிவித்தும் ,துணைவேந்தரை பாராட்டும் வகையில் விழாநடைபெற்றது .விழாவில்மாவட்டஆட்சியர்திரு .வா .சம்பத் I.A.S., மற்றும்
 காவல் துறை துணைத் தலைவர் திரு .கே .சண்முகவேல் I.P.S.,அவர்களும் 
கலந்துகொண்டு துணைவேந்தருக்கு நினைவுப் பரிசு வழங்கிபாரட்டினர் .
                           விழாவினை ஆசிரியமாமணி தெ .வே .சஞ்சீவிராயன் ,
உதவிதொடக்க  கல்வி அலுவலர் (ஓய்வு )G .சீத்தாராமன் மற்றும் ஆசிரியர்கள் J .வினாயகமூர்த்தி ,S .சரவணன் ,M .கணேசன்ஆகியோர் ஒருங்கிணைத்தனர் .




நூல் வெளியீட்டு விழா



         கவிஞர் ஜா. வினாயகமுர்த்தி யின்  "வெள்ளை வண்டி"  நூல் வெளியீட்டு  விழா விழுப்புரத்தில் 23.05.2009.இல் நடைபெற்றது .நூல் வெளியிட்டவர் கவிஞர்    சக்தி  நூல் பெற்றுக்கொண்டவர் முனைவர்  G .விஸ்வநாதன்                 மற்றும்      கவிஞர் பேரா .த.பழமலய், டாக்டர்  சி.மா .பாலதண்டாயுதம் , நீதிபதி ப .உ .செம்மல் ,ஆசிரியர்  த. பாலு,  ஆர் .வி .தனுசு, மற்றும் சான்றோர் பெருமக்கள் கலந்துகொண்டு  கவிஞர் அவர்களை பாராட்டிப்  பேசினர் .
 
Facebook Google Digg Pinterest