Friday, 9 December 2011

தேர்தல் திருவிழா


இந்த ---
மாபெரும் திருவிழா தேதியில் தான்
 எங்கள்  ஊரில் முழுச் சுதந்திர
 தினமாகக் கொண்டாடப் படுகிறது !

எங்களு டைய  மனிதாபிமான
 உரிமைகள் கூட  அன்று தானே
 அரங்கேற்றமடைகிறது ! 

ஐந்து வருடத் திற்கு  முன்
 எங்கள் ஓட்டுரிமைகளைக் கொள்ளையடித்துக்
' கொள்ளை' கொண்டவரெல்லாம்
 மறுபடியும் எங்கள் முன்
 தங்களைப் புதுப்பித்துக் கொள்ளவரும் 
புண்ணிய நாளல்லவா அது!

அன்று தானே நாங்கள் எல்லோரும் 
அவர்களுக்கு முன் கடவுளாகக் 
காட்சித்தந்து   வாக்குகளை அளித்துவிட்டு 
வாய்பேசாஊமையாகி விடுகிறோம் !

புண்ணாகிப் போன எங்கள் பாதங்களைச்
சுமந்துச் செல்ல 
எத்தனை சொகுசு வண்டிகள் 
அன்று அனுப்பப் படுகிறது
 எங்கள் வீட்டிற்கு முன் ...!

எங்கள் மூதாதையர்கள் கூட 
அன்றுதானே மறுபிறவி எடுத்துவிட்டு 
எங்களுக்குத் தெரியாமலேயே 
மறைந்து விடுகிறார்கள் !

மழைக் காலங்களில்
ஒப்பாரி வைத்து ஒழுகிக் கொண்டிருக்கும்
ஓலைக்குடிசைகளெல்லாம் 
அன்று ஓட்டுகுடிசைகளாகத் தன்னைப் 
புதுப்பித்துக் கொள்ளும் 
புத்தாண்டு   தினமல்லவா அது !

சில்லரைகளை எண்ணிக் கொண்டிருந்த 
எங்கள் கரங்களுக்குள் 
கரன்சி நோட்டுக்களாக வந்து குவியும்
நட்சித்திர  இரவல்லவா அது !

முடமாக்கப்பட்ட எங்களுடைய கோரிக்கை 
மனுக்களெல்லாம் அன்றுதானே 
அவசர சிகிச்சைப் பகுதிக்கு
அழைத்து வரப்பட்டு
நிவாரணம் அளிக்கப்படுகிறது ?


o
                                

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest