Thursday, 22 December 2011

நீ உன் இதயத்திலிருந்து



நீ உன் இதயத்திலிருந்து
என்னை இறக்கியதுமே நான்
கவிதையின் கழுத்தில்
 தாலி கட்டி விட்டேன் !

அதனால் தான்
கல்லறை கூட என்னைக்
காண மறுத்திட்டது!

பாவையே !
உன்
எண்ணங்கள் எல்லாம்
என் நலத்தில்தான் என்று
இராவணன் மனைவி
மண்டோதரியாய்ச் சுளுரைத்தாய் !
ஏனோ ----
திடீரென்று
இராவணன் தங்கை
சூர்ப்பனகைபோல்
நம்
சுகமான வாழ்வில்
சூதாடி விட்டாயே !


o


ஒரு
மனிதனுக்குத்
துன்பம்
தொடர்ந்து
வரும்போது
மரணதேவதை
அவனெதிரில்
நிர்வாணமாகக்
காட்சித் தருகிறாள் !

அந்தநேரமே
அவன்
அவள்மீது ஆசை
ஆசை கொண்டுவிட்டால்
மறுகணமே
அவனால்
அவள்
மகுடம்
சூட்டிக் கொள்கிறாள் !


 o

ஒவ்வொரு---
மனித இதயத்திலும்
ஒரு ஆன்மா
குடிகொண்டிருக்கிறது.
அது
சுதந்திரம் பெற்று
வெளிவரும் பொழுதுதான் 
அந்த
மனிதனுடைய
வளர்ச்சிப் பாதைக்கோ ...
அல்லது
அழிவுப் பாதைக்கோ ...
அது
வழி வகுக்கிறது !

o

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest