Thursday, 29 December 2011

என் நந்தவனத்தில் ....

கல்லூரிச் சோலையில்
           காலெடுத்து வைக்கையிலே--உன்
                       கண்பட்டு வீழ்ந்து விட்டேன்
                                  காதல் சிறையினிலே!

காதல் மொழிப்பேசி நான்
           கரம்பிடிக்க வருகையிலே --என்
                      கன்னத்தில் கொடுத்து விட்டாய்
                                கனிமுத்தம்  ஒன்றனையே !
காதல் கவி பாடக்
           கவி நான் வருகையிலே --உன்
                       கைத் தட்டிக் கவிழ்த்து விட்டாய்
                                   கவியரங்க மேடையிலே!

மனசுக்குள் இடம் பிடிக்க நான்
        மாதவம் புரிகையிலே--உன் 
                மணவறைக்குள்  அழைத்து விட்டாய்
                           மனசுக்குப்  பிடித்தவனையே ! 

புகைப்படம் எடுக்க நான்
         புறப்படுகையிலே --உன்
                   புன்னகை மட்டும் அழித்து விட்டாய்
                            புகைப் படத்திற்குள்ளேயே!

நம் காலத்தின் சோதனையில்
         கரைந்து விட்ட நினைவுகளே --என்
                  காதல்  நந்தவனத்தில் பூத்துவிட்டன... 
                             கண்ணீர்ப் பூக்களாகவே ...!
                 

o                                                          

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest