Wednesday, 5 October 2011

மரங்களோடு அல்ல !

தலைப்பாகையோடும்  கோமணத்தோடும்
அவசர அவசரமாய்க் கையில்  
கொடுவாள் ஏந்தி       
எங்கே புறப்படுகிறாய்  மனிதா !  
யாரைப் பழி தீர்க்க இந்தக் கோலம் ?  

உன்  வயிற்றுப் பசிக்கு  உணவளித்து
உன்  உயிரைக்  காப்பாற்ற   
வானத்தை நோக்கித்  தவமிருக்கும்  
அந்த வானுயர்ந்த மரங்களையா    
வெட்டப்  போகிறாய் !

உன் உரிமைத் தாகத்திற்கு -அதன்  
உயிரையா  குடிக்க வேண்டும் ?

தலைமுறை தலைமுறையாய்  
நம்மோடு உறவுகொண்டு வரும்
உயிர்ச் சொந்தங்கள் அல்லவா அவைகள் !

அவற்றை விதவையாக்கினால்  
வான்மேகம் அல்லவா  
தன் கண்களை இறுக்கிச் சாத்திக் கொள்ளும் !

உன் கையில்  ஏன் 
மண்ணைண்ணையோடு  தீப்பெட்டி ?
யாரைத்   தீக்குளிக்கக்    
கட்டாயப்   படுத்தப் போகிறாய் ?

மனிதர்கள்   தீட்ட முடியாத  
அந்தப் பசுமை நிறைந்த ....
வானுயர் வண்ண ஓவியங்களையா....?  

அவைகள்  உனக்கு  
அமுதசுரபியாய்  அவ்வப்போது   
வாரி  வழங்குகின்றனவே!

தவறு  செய்யாத அதனைத்   
தண்டிக்கப் போவது  நியாயமா ?

வெட்டுபவனும்   நீதான்   
வளர்ப்பவனும்   நீதானே!
உன்னைவிட உரிமை   கொண்டாடுவதற்கு  
இந்த மண்ணில் வேறு  எவருக்கு உரிமை உண்டு ?

மனிதா !  நீ  போரிடு 
மரங்களோடு அல்ல !
உன்னை அடக்கி  ஆளும்  மனிதர்களோடு!    

o



             TT

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest