Wednesday, 19 October 2011

தூறல்



என்
 ஈரமான விழிகளில் -நீயோ
ஓரமாய் ஓய்வெடுத்தாய்
ஓய்வெடுத்த என் நினைவில் -என்னைப்
பாய் விரித்துப் படுக்கவைத்தாய்
படுக்கவைத்த பைங்கிளியே -உன்
சிரிப்பெங்கே தொலைத்து விட்டாய் 
தொலைத்து விட்ட  தொடுவானமே-உன்  
தூறல் பட்டுத் துடித்தெழுந்தேன் 
துடித்தெழுந்து  பார்க்கையிலே -உன் 
மடிமீது தவம் கிடந்தேன் !

தவம் கிடந்த ஞானத்திலே-எனக்குள்
தவழ்ந்து வந்து முத்தமிட்டாய்
முத்தம் பட்ட மோகத்திலே -உனக்குள்
சத்தமின்றி முத்தெடுத்தேன்
முத்தெடுத்துப்  பார்க்கையிலே -என்  
முகச் சாயல் தெரிந்ததடி 
தெரிந்து கொண்ட என் கண்மணியே -நீ  
புரிந்து கொண்ட என்  மனைவியடி!

o         



   

No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest