Thursday, 6 October 2011

நட்பு



நட்பு மனிதர்களுக்குக் கிடைத்த மகத்தான ஆயுதம்!  
நட்பு பறவைகளுக்கும் உண்டு ;விலங்குகளுக்கும் உண்டு  .

நட்பின் பயணம் பேருந்திலும் கிடைக்கும் ; பேனாவிலும் கிடைக்கும்  .
தெரிந்தும் கிடைக்கும் ; தெரியாமலும் கிடைக்கும் .

நட்புக்கு முகம் தேவையில்லை; அறிமுகம் இருந்தாலே போதும் .
ஒரு  ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையில்  
ஏற்படுகின்ற நட்பே காதலெனும் தேரை கட்டியிழுக்கிறது !

நட்பு ஒன்றே எதற்கும் கட்டுப்படாது  .
நட்பு ஒன்றே எதையும் காயப்படுத்தாது .

நட்புக்கு நிறம் இல்லை; சாதி இல்லை; மதம் இல்லை  .
நட்புக்கு முறிவு இல்லை ; ஆனால் பிரிவு உண்டு .

நட்பு ஒன்றே மனிதர்களை  
அறிமுகப்படுத்தும் அடையாளச் சின்னம் !

நட்பு இல்லையெனில் உறவுகள் இல்லை  .
உறவுகள் இல்லையெனில் உயிர்கள் இல்லை .

நட்பு  சிலருக்கு  வாழ்க்கையைத்  தருகிறது  .
சிலருக்கு வாழக்   கற்றுக் கொடுக்கிறது .

நட்பு ஒற்றுமையை வளர்க்கும்;  உயிரைக் காக்கும் .

நட்பே  உலக நாடுகளை ஒன்றினைக்கும் ... 
செயற்கைக் கோளாகும் !

மனிதர்களே ! நட்பு  செய்யுங்கள்  ....
மனிதப்   பிறவியின்  மகத்துவம் புரியும்  !  

மண்ணின் மடியில் மரம் வளர்ப்போம்...
மழை பொழியும் .....
   
மனித மனங்களில் நட்பை விதைப்போம்  .....
உலகம்  அமைதிபெறும்......!


o     

    






No comments:

Post a Comment

Facebook Google Digg Pinterest