பிழைக்கப் போனவர்கள்
பிணமாய் வந்தார்கள் !
காலையிலிருந்து மாலைவரை
சூரிய அடுப்பில்
சுருங்கிப் போனவர்கள்
கள்ளச் சாராயத்தால்
எரிந்து போனார்கள் .
உடம்பு வலிக்காக
மருந்தாய் குடித்தது
இவர்களின் உயிரையே குடித்தது .
தூக்கத்திர்காகக் குடித்தவர்கள்
தூங்கிப் போனார்கள் நிரந்தரமாக .
யார்யாரோ வீட்டு அடுப்புப் புகைய
இந்த ஏழைகளின் வீட்டின்
அடுப்பையா அணைக்க வேண்டும் ?
மக்களுக்குக் காவலாய் இருப்பேன்
என உறுதி எடுத்தவர்கள்
மக்களைக் காவு கொடுக்கவா
காச்சுபவர்களுக்குக் காவலாய் இருப்பது ?
கணவன் வருகைக்காக
பொட்டோடும் பூவோடும் நிற்பவர்கள்
கையில் பிண மாலையோடு
அல்லவா நின்றார்கள் !
திண்பண்டத்தை எதிர்பார்த்து
நிற்கும் குழந்தைகள்
அன்று அப்பாவிற்காக
தீப்பந்தத்தோடு அல்லவா நின்றார்கள் !
இந்த ஏழைகளின்
கனவுத் தோட்டங்கள்
கல்லறைகளாய் மாறிப் போனதே !
சின்ன எழுத்தில்
இது விஷம் என்று விளம்பரம் .
படிக்காத பாமரனுக்கு எப்படி புரியும் ?
தண்ணீர் விடமாட்டேன் என்றவர்கள்
உயிர் பறிக்க
கேட்காமலே திறந்து விட்டார்கள்
கள்ளச் சாராயத்தை...
என்னே தேசப்பற்று !
o




No comments:
Post a Comment